தேனீ அல்லது வண்டு கடித்து விட்டதா? இதை செய்யுங்க !!


தேனீ மற்றும் வண்டு கடியின் வலியை குறைக்கவும் வீக்கத்தை போக்கவும் அற்புதமான பாட்டி வைத்தியம்.

வாழை இலை :
வாழை இலையின் சாறு எடுத்து விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் தடவினால் வலி கட்டுப்படுத்தப்படும். வீக்கமும் குறையும்.

சமையல் சோடா :
சமையல் சோடா அல்லது விணிகரை நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து தேனீ கடத்த இடத்தில் தடவினால் அந்த இடத்தில் வலி விரைவில் குறையும்.

உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை தேனீ அல்லது விஷயூச்சிகள் கடித்த இடத்தில் தடவினால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.


பூண்டு சாறு :
பூண்டின் சாற்றை எடுத்து பூச்சிகள் கடித்த இடத்தில் தடவி அதை 20 நிமிடம் கழித்து கழுவினால் அந்த இடத்தில் வலி மற்றும் வீக்கம் குறைவாக இருக்கும்.

பப்பாளி :
பப்பாளி வீக்கத்தை குறைக்கும் ஒரு சிறந்த பழம். எனவே பப்பாளியின் சதைப்பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் அந்த இடத்தின் கடுப்பு குறையும்.

தேன் :
தேனீக்கடிக்கு தேன் தடவினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் மூலம் தேன் கடியால் ஏற்பட்ட வலி மற்றும் அதன் வீரியத்தை குறைத்துவிடும்.

Lankasri

Post a Comment

Previous Post Next Post