சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிக்சை மேற்கொள்ளப்படுகிறது.
நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்துவது. அதிக வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதிய தண்ணிர் பருகாதது. ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, அதன் எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன.
தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருப்பதால் தாகம் ஏற்படுவது குறையும் இதனால் தண்ணீர் பருக வாய்ப்பில்லை இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.
தினமும் குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் , தக்காலி, முந்திரி பருப்பு, சாக்லெட், போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகு வலி, போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிகம் அதிகம் தண்ணீர் குடித்தால் சிறுநீரக கல் உருவாவதை தடுக்க முடியும்.
தண்ணிரில் தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம், அதிகமாக இளநீர், வாழைதண்டு, எலுமிச்சை சாறு போன்றவற்றை சாப்பிடாலும் சிறுநீரக தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.,
Tags
மருத்துவ குறிப்புகள்