முகத்தை அழகாகக்க இயற்கையான முறை !


பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் தனது முகம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதற்காக கடைகளில் கிடைக்கும் அழகுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான முறைகளை பின்பற்றினால் முகம் அழகாக இருக்கும்.

* பழங்களில் வாழைப்பழம், பப்பாளி பழம், அவகேடோ போன்றவை சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரக்கூபியவை , எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்தில் தடவிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி  வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி ஆகிய மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

* எல்லா காய்கறிகளையும் சேர்த்து சூப்செய்யும்போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டினால் சருமத்துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும், தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தயில், வெண்ணெய், போன்றவயுடன் வடித்த கஞ்சியுடன் பாலை சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம்  இறுக்கமாகும்.


* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசினால் நிறம் கூடுதலாகும், 

* முகத்தில் தூசிகள் படிந்திருந்தால் முகம் பொலிவின்றி காணப்படும் எனவே அப்போது சுத்தமான நீரினால் முகத்தை கழுவினால் சுத்தமாகவும்  பருக்களின்றி இருக்கும்.

* எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். அத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றை கொண்டு தினமும் முகத்தில் சிறிதுநேரம் தேய்த்து கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவோடு மின்னும்.

தகவல் . webDunia

Post a Comment

Previous Post Next Post