துணையிடம் (கணவன் மணைவி) சொல்லக்கூடாத வார்த்தைகள் !



இந்த பதிவு ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் பொருந்தும் நம் துணையிடம் நாம் கூறும் வார்த்தைகள் சில உறவை வளர்க்கவும் சில உறவை முறிக்கவும் செய்யும். 


முக்கியமாக தம்பதியருக்குள் பரிமாறிக்கொள்ளும் சில வார்த்தைகள் இருவரையும் காயப்படுத்திவிடும். பேசியபிறகு வருத்தப்படுவதற்கு பதில்  பேசக்கூடாத நச்சு வர்த்தைகள் எவை  என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


* உன்மீது நம்பிக்கை இல்லை.

நீ பொய்யானவன்/ பொய்யானவள், என்று முத்திரைகுத்தி பேசும்போது தம்பதியர் இடையே நம்பிக்கை குறைந்துவிடும்,
உங்கள் துணை பொய் சொல்வதாக தோன்றினால் துணையிடம் நீ கூறுவதில் உண்மையாக குறைஇருப்பதாக நான் நினைக்கிறேன் என்று சொல்வதே சிறந்த அணுகுமுறை .

உங்கள் துணையிடம் நேரடியாக குற்றம் சாட்டுவதை விட நிதானமாக அவரின் குறைகளை கூறுவது சிறந்தது.

* நீ என்னை உண்மையாக நேசிக்கிறாயா ?

இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது துணையின் நேசத்தையும், பாசத்தையும், பரிசோதிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

* நீ இப்படி இருப்பாய் என நினைக்கவில்லை.

இதுபோன்ற வார்த்தைகள் உங்கள் துணையை எதிர்மறையாக மதிப்பீடு செய்வதாகும். இந்த வார்த்தை உங்கள் துணையின் மீது நம்பிக்கை இல்லை என உணர்த்தும் வார்த்தையாகும். துணையை குறைவாகவும் தவறாகவும் மதிப்பீடு செய்யும்போது கோபம் உருவாகும்.

* எதுவாக இருந்தால் உனக்கென்ன.

இந்த  வார்த்தையை கூறும்போது உங்கள் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் நிராகரிக்கப்படுவதாகவும் தோன்றும். இது போன்ற வார்த்தைகள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் .,
உங்கள் துணையை நேரடியாக குற்றம் சாட்டுவதை விட நிதானமாக துணையின் குறைகளை கூறுவது சிறந்தது மனமும் புண்படாது.

* உனக்கு எதுவுமே புரியாது.

முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் எனக்கு உனக்கு எதுவுமே தெரியாது, புரியாது என்ற வார்த்தை துணையிடத்தில் தாழ்வான எண்னம் ஏற்படச்செய்யும்.

* எனக்கு விவாகரத்து வேண்டும்.

சண்டைகளோ, கருத்து வேறுபாடுகளோ வரும்போது விவாகரத்து வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அப்படி சொல்வது துணையை நிராகரிப்பதாக உணரச்செய்யும். இந்த வார்த்தை திருப்தி இல்லாத மணவாழ்க்கையை வெளிக்காட்டுகிறது. இதுபோன்ற வார்த்தைகள் துணையை கண்டிப்பாக காயப்படுத்தும்.

இவற்றை எல்லாம் தடுக்க...

தன் துணையுடன் பிரச்சனைகள் தொடங்கும் போது ஒரு சிறிய புன்னகை மற்றும் துணையை கட்டியனைத்து முத்தம் இடுவதன் மூலம் சண்டையிடும் மனோபாவம் குறைந்துவிடும். இந்த அணைப்பு நிதானமாக பேசி தீர்க்கும் சூழளை உருவாக்கும், தம்பதிகளுக்கிடையே உறவு மேம்படும். 

துணைக்கு நல்ல காரியங்களை கற்றுக்கொடுப்பதும் ஊக்கப்படுத்துவதும் சிறந்த அணுகுமுறை.

நன்றி .

Post a Comment

Previous Post Next Post