தாய்பால் :-
குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தேடும் தாயின் தவிப்பும் .தனது தாயின் பாசத்திற்காக ஏங்கும் குழுந்தையின் துடிப்பும் அற்புதம்.
அம்மாவிற்கும் குழந்தைக்கு மான உளவியல் ரீதியான தீண்டல் அரவணைப்பு பாதுகாப்பு போன்ற அனுசரணைகளை எப்படி செயற்கைப் பாலில் (பவுடர் பால்) -லில் எதிர்பார்க்க முடியும்??
தாய்பால் ஒரு வரப்பிரசாதம் கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவுக்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது.
சுகப்பிரசவம் என்றால் அரை மணி நேரமும் அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளும் தாய்பால் புகட்ட வேண்டும்.
தாய்ப்பாலின் சத்துக்கள்:-
* குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் கொலாஸ்ட்ரம். எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு தேவையான நோயை அண்டவிடாத ஆன்டிபாடீஸ் (antibodies) எனும் தடுப்பு மருந்து உள்ளது.
* குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அதற்கு பிறகு ஒரு வருடமாவது தாய் பாலுடன் சேர்ந்த இணை உணவுகள் அவசியம்.
* குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்ப்பது தாய்பால். எளிதில் செரிக்கும் புரதம் . கொழுப்பு, கால்சியம், இரும்பு சத்து மாவுச்சத்து இவற்றோடு விட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
* குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் இருந்து தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் காப்பதோடு டயாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும்.
ஆதாரம் : உலக சுகாதார நிறுவனம்.
by . K. A
Tags
பயனுள்ள தகவல்