இவைகளை காலை நேரத்தில் குடிக்காமல் இருந்தாலே போதும் உடல் எடை குறையும்.,!


எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். உடல் எடையை குறைக்க நாம் செய்யும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிய காரனம் நமக்கு முழுமையான தெளிவு இல்லாததுதான். நாம் என்ன உணவை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சில ஆரோக்கியமான உணவுகளை  குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடும் உணவுகளினால் கூட உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும்.

இந்த பதிவில் காலை நேரத்தில் குடிக்கக்கூடாத பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இனிப்பு லஸ்ஸி.

தயிர், சர்க்கரை மற்றும் நீர் கலந்த கலவையை காலை நேரத்தில் குடிப்பதை பலர் வழக்கமாக கொண்ருப்பார்கள் இதில் அதிகமாக உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை உடல் எடையை விரைவில் அதிகரித்துவிடும். ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் உள்ளது.

எருமைப்பால்.

உங்களுக்கு தெரியுமா ஒரு கிளாஸ் எருமைப்பாலில் 280 கலோரிகள் உள்ளது. மேலும் 16.81 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய இந்த தகவலே போதும். காலை நேரத்தில் எருமைப்பால் குடிப்பதை தவிர்ப்பதுதான் உடல் எடைக்கு நல்லது.


வாழைப்பழ மில்க்சேக்.

உங்களுக்கு எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒரு வாழைப்பழத்தில் மட்டுமே 108 கலோரிகள் உள்ளது எனில்  அதனுடன் பால் இணையும்போது அவற்றின் கலோரிகளின் எண்ணிக்கை   எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பெரும்பாலும் பாலில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்ப்பது உடல் எடையை குறைப்பதற்கு நல்லது.

Post a Comment

Previous Post Next Post