வீட்டில் பெண்களுக்கு அதிக வேலை உள்ள இடம் எதுஎன்றால் சமையல் அறை, சில சமையல் அறை தகவல்கள் உங்களுக்காக.
* மீன் பொறிக்கும் போது வரும் வாசனை அருகில் உள்ள வீடுகளில் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, அந்த வாசனை வெளியே செல்லாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு மீன்களை பொறித்தால் வாசனை நம் வீட்டை தாண்டாது.
* காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பு கழுவுவது சிறந்தது.
* கத்தரிக்காய் மற்றும் வாழைத்தண்டு போன்றவற்றை நறுக்கிய பின்னர் சமைக்கும் வரை தண்ணீரில் போட்டுவைத்தால் கருக்காமல் இருக்கும்.
* வெங்காயத்தை நான்கு பாகமாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைத்த பிறகு நறுக்கினால் கண்கள் எரியாது.
* பூண்டை தட்டிப்போட்டு சமைப்பதை விட தோல் உரித்து காற்றாட விட்டு சமைப்பதே சிறந்தது .
* முட்டையைப் பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சல் தூள் சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்வது நல்லது .
* தோசை வராமல் போனால் உடனடியாக தோசைக் கல்லின் மீது உப்புத்தூளைக் கொட்டி முழுமையாக தடவி பின்னர் உப்பை தள்ளிவிட்டு தோசை மாவை ஊற்றினால் தோசை அழகாக வரும்.
* கெட்டுப்போன உணவு என்று தெரிந்தால் அதை உணவு கிடைக்காதவருக்குகூட கொடுக்க வேண்டாம் அதை நீங்களும் சாப்பிட வேண்டாம் .
* உணவுகளை அதிகநாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
* உணவு அதிகமாக இருந்தால் அது நன்றாக இருக்கும்போதே அருகில் இருக்கக்கூடியவர்களுக்கு கொடுத்துவிடலாம், வீணானல் யாருக்கும் பயனில்லை.
by. K.A
Tags
சமயல் குறிப்புகள் .