2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது ஆஸ்துமாவை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து கால்சியம் அதிகமாக உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
5. தினமும் முருங்கை கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவுபெறும்.
6. அதிகமாக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பின் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிரச்சனைகளுக்கு சுக்கையும் பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் வாய்வுதொல்லை நீங்கும்.
8. அடிக்கடி டீ, காப்பி, ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி ,சிகரெட், மது குடித்தாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.
9. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
10, கருவேப்பிலை , சீரகம், இஞ்சி, மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்லர் தண்ணீர் உற்றி கொதிக்கவைத்து குடித்தால் அஜிர்ணம் சரியாகிவிடும்.
11, முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டியடிக்கும்.
12, உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டுவந்தால் உடல் எடை கூடும்.
13. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.
14. குளிக்கும் சோப்பை தலைக்கு பயன்படுத்தக்கூடாது , பயன்படுத்தினால் முடி கொட்டி விரைவில் நரைத்துவிடும்.
15. இட்லிக்கு மாவு அறைக்கும்போது உளுந்துக்கு பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கும்.
16. கூடுமான வரையில் தாளித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
17, மைதாமாவில் செய்த உணவுகளை குறைப்பதும். அல்லது நீக்கினாலும் உடல் பருமனை குறைக்கலாம்.
18. நம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பை அடிக்கடி மாற்றக்கூடாது அப்படி மாற்றினால் சரும வியாதிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.,
by .K.A
Tags
பயனுள்ள தகவல்