வயக்ரா மாத்திரைகளை நாம் உட்கொள்வதால் ஆரம்பத்தில் இனிமையை தந்து பின்பு போக போக பல்வேறு தீங்கை ஏற்படுத்தும். இவற்றின் தீமைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
*ரத்த அழுத்தத்தை குறைக்கும் வயக்ரா இதில் சில்டெனாஃபில் (sildenafil) என்கிற மூல பொருள் உள்ளது. இதுதான் உடலில் வேதி வினைகளை ஏற்படுத்தி, பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைக்கிறது.
*வயக்ரா மாத்திரைகளை நாம் உட்கொள்வதால் ஆரம்பத்தில் இனிமையை தந்து போக போக பல்வேறு தீங்கை ஏற்படுத்தும். இது ஒரு வித உணர்வை நேரடியாக தூண்டாமல் மனதில் மாய உணர்வை ஏற்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட செய்யும்.
*வயக்ரா உட்கொள்வதால் நேரடியாக நரம்பு மண்டலத்தில் தாம்பத்திய உணர்வை அதிகம் தூண்ட செய்யும். இதனால், ஆண்களுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, தொடர்ந்து எடுத்து கொள்ள செய்யும். இது நரம்பு மண்டலத்தையே முற்றலிலுமாக சிதைத்து விடும்.
*வயாகராவை தொடர்ந்து எடுத்து கொண்டு வந்தால் ரத்த ஓட்ட பாதையில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம். இது மாரடைப்பு, பக்க வாதம், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றை ஏற்படுத்தும். இதயம் பலவீனம் உள்ளவர்கள் வயாகராவை எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
*இதன் தாக்கம் அதிக நேரம் இருந்தால் பிறப்புறுப்பில் ஒரு வித வலியை இது தருமாம்.
*வயகராவை எடுத்து கொள்வோருக்கு அதிக தலைவலி ஏற்படும். குறிப்பாக இது மூளை பகுதிக்கு செல்வதால் இதன் தாக்கம் அதிகரிக்க கூடும்.
*உடல் சோர்வை ஏற்படுத்தும். மேலும் உடல் நீர் சத்தை உறிஞ்சுவதால் அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக தண்ணீர் பருகினாலும் தாகம் அடங்காது.
*உறவின்போது களைப்பு ஏற்படுவதால் உறவில் படிப்படியாக நாட்டம் குறையும்.
*பெண்களை முரட்டுத்தனமான அடிமைகளை நடத்துவதுபோல நடத்தும் வக்ர எண்ணம் தோன்ற வயக்ரா ஒரு காரணம். தன் உடல் இன்பத்துக்காக பெண்களை அடித்து துன்புறுத்தத் தோன்றும்.
*வயக்ரா மாத்திரையில் உள்ள ரசாயனம் நரம்பு மண்டலத்தை பாதிக்க செய்வதால் நேரடியாக கண் பார்வையை தாக்கும்.
Tags
உடல் உறவு குறிப்பு