பொதுவாக சிலருக்கு உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து அழகையே கெடுத்து விடுகின்றது . இது சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால் , அதிகமாக முடி வளருகின்றது.
இதற்கு அழகு நிலையங்களுக்கு தான் சென்று போக்க வேண்டும் என்ற அவசியமில்லை . இதனை இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும் . தற்போது அவற்றை சிலவற்றை பார்ப்போம் .
* குப்பை மேனி இலை , வேப்பங்கொழுந்து , விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து , படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும் . தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் , ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும் .
* கடலை மாவு , தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும் . இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும் .
* உருளைக்கிழங்கை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் , நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.
* வாழைப்பழம் மற்றும் ஒட்ஸ் ஒட்ஸை பொடி செய்து , அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து , முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து , குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் . இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும் .
* எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து , சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும் . இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் , முடியின் வளர்ச்சியானது . தடைபடும்.
Tags
அழகு குறிப்புகள்.